1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AC Accident in chennai one dead

ஏ.சி. வெடித்து இளைஞர் பரிதாப பலி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ac fire
ஏ.சி. வெடித்து இளைஞர் பரிதாப பலி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெரம்பலூரில்  உள்ள வீட்டில்  ஏசி வெடித்ததால்ஏற்பட்ட தீ விபத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. 
 
உயிரிழந்த ஷ்யாமுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளதாகவும், மனைவி தாய் வீட்டுக்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஷ்யாம் வீட்டுக்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் ஏசி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இன்றுமுதல் ஆன்லைனில் மட்டுமே வருகைப்பதிவு! – அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு!