தொடர்புடைய செய்திகள்
- 20 மணி நேரம் மின்வெட்டு: வீட்டை காலி செய்யுங்கள் என மின்வாரிய அதிகாரிகளின் திமிர் பதில்!
- லாலு பிரசாத் யாதவ்வுக்கு ஜாமீன்..ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு
- EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை - பறக்கும் மீம்ஸ்!
- தமிழ்நாடு மின்வெட்டுக்கு மத்திய தொகுப்புதான் பிரச்னையா?
- மின்வெட்டு தொடர்பாக காரச்சார விவாதம்! – அதிமுக வெளிநடப்பு!
மின்வெட்டு ஏன் என கேட்க எனக்கு உரிமை உள்ளது: சாக்சி தோனி டுவிட்
மின்வெட்டு ஏன் என கேட்க எனக்கு உரிமை உள்ளது: சாக்சி தோனி டுவிட்
நான் ஜார்கண்ட் மாநிலத்தில் வரி கட்டுகிறேன், எனவே மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்பதை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது என்றும் டுவிட்டரில் தோனியின் மனைவி சாக்சி டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அம்மாநில பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கரி பற்றாக்குறை என ஒரு காரணத்தை கூறி பல மாதங்களாக மின்வெட்டு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது .
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்சி இதுகுறித்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் வரி செலுத்துபவராக இங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வருகிறேன். இங்கு ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் இந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
இந்த கேள்விக்கு ஜார்கண்ட் மாநில மின்துறை அமைச்சர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்
