1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (23:50 IST)

லாலு பிரசாத் யாதவ்வுக்கு ஜாமீன்..ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு

lalu
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ்  கால் நடைகளுக்காகத் தீவனம் வாங்கியதில் கோடிக்கணக்காக ஊழல் செய்தார். இதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

போலி ஆவணம் மூலம் ரூ.139 கோடி அளவுக்கு ஊழல் செய்த குற்றம்   நிரூபிக்கப்பட்டு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதம்  விதிக்கப்பட்டது.

லாலு பிரசாத் இதுவரை 41 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில்  ஜாமீன் வேண்டுமென   அவர் சார்பில், ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.