1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (18:28 IST)

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு திடீர் வாபஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே, ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு இருக்கும் என்றும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது
 
மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பால் கர்நாடக மாநில மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக ஐடியில் பணிபுரியும் இரவு நேர பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு என்ற நேற்றைய அறிவிப்பு வாபஸ் பெறுவதாக கர்நாடக மாநில அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்