செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (09:26 IST)

ஊரடங்குக்குப் பிறகு அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் இதுதான் – வெளியான் தகவல்!

ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது டெனட்தான் என சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் அக்டோபர் மாதம்தான் திறக்கப்பட்டன. அதையடுத்து இந்தியா முழுவதும் சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படம் முதலிடம் பிடித்துள்ளது.

புக் மை ஷோ என்ற இணையதளம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. அவர்களின் தளத்தின் மூலம் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 8.5 லட்சம் டிக்கெட்களில் 3 லட்சம் டிக்கெட்கள் டெனட் திரைப்படத்தை பார்க்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்த இடத்தில் தமிழ்ப் படமான பிஸ்கோத் உள்ளது. இந்த தரவு அக்டோபர் 16 முதல் டிசம்பர் 18 வரையிலான காலகட்டத்தின் தரவு ஆகும்.