1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. invited for the final program of the Indian unity pilgrimage

'இந்திய ஒற்றுமை யாத்திரை' பயணம் இறுதி நிகழ்ச்சிக்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு- காங்கிரஸ் திட்டம்

Indian unity
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, சமீபத்தில், ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய  மாநிலங்களைக் கடந்து  இன்று பஞ்சாம் மாநிலத்திற்குல்  நுழைத்திருக்கிறார்.

இந்த  நிலையில், வரும் ஜனவரி 20 ஆம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் ஜம்மு காஷ்மீர் யூனியலில் நிறைவடைகிறது.

இந்த  நிறைவு விழாவில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ்யாதவ், மாயாவதி, நிதிஸ்குமார் உள்ளிட்ட  முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும், 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க, காங்கிரஸ் தலைவர் கார்க்கே கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்ச்சிகள் முக்கிய முடிவுககள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நாசா விண்வெளி மையத்தில் இந்திய வம்சாளி பெண் நியமனம்