1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. fine without ticket in train is increased

ரயிலில் டிக்கெட் எடுக்காம போறீங்களா?!.. அபராதத் தொகையை ஏத்திட்டாங்க!...

train
இந்தியாவில் எப்போது ரயில் அறிமுகம் செய்யப்பட்டதோ அப்போது முதலே அதில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பழக்கம் பலரிடம் ஏற்பட்டது. தற்போது வரை அது தொடர்கிறது. குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ரயில்களில் டிக்கெட் எடுப்பதே கிடையாது. கும்பலாக ரயில்களில் ஏறுவார்கள்.. டிக்கெட் வாங்க மாட்டார்கள்.. அது மட்டுமல்ல.. ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வார்கள். இப்படி பல அலப்பறைகளை அவர்கள் செய்வதுண்டு.. மிகவும் அரிதாக மட்டுமே அவர்கள் டிக்கெட் பரிசோதகர்களிடம் சிக்குவார்கள்.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் வசிக்கும் பலருக்கும் கூட ரயிலில் டிக்கெட் எடுக்கும் பழக்கம் இருப்பதில்லை. டி.டி.ஆரிடம் சிக்கவா போகிறோம் என்கிற தைரியத்தில்தான் தொடர்ந்து ரயிலில் டிக்கெட் இல்லாமல் பலரும் பயணித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான், ஜூலை 1ம் தேதி முதல் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பார்த்தால் ரூ. 500 ரூபாய் அபராதம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது 250 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த அபராத பகுதி தற்போது உயர்த்தப்பட்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
மோடி புத்திசாலி!.. நாடும் அமைதி.. அவரும் அமைதி!.. பாராட்டிய டிரம்ப்!...