1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Double-Decker Buses Make a Comeback in Delhi

டெல்லி சாலைகளில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்: 35 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை..!

Delhi
தலைநகர் டெல்லியின் சாலைகளில், 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டெல்லி போக்குவரத்து கழகம் இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த முயற்சி, நகரத்தின் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 டபுள் டெக்கர்  பேருந்துகள் 1990-களின் முற்பகுதி வரை டெல்லியில் இயங்கி வந்தன. அதன் பிறகு அவை படிப்படியாக நிறுத்தப்பட்டன. இப்போது, அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பொது போக்குவரத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
ஒற்றை அடுக்கு பேருந்துகளை விட இரட்டை அடுக்கு பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றி செல்ல முடியும். இது முக்கிய வழித்தடங்களில் உள்ள நெரிசலை குறைக்கும்.
 
இந்த புதிய பேருந்துகள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு, குறைந்த எரிபொருள் பயன்படுத்தி காற்று மாசுவை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
 
 டபுள் டெக்கர் பேருந்துகள் பல்வேறு நவீன வசதிகளுடன் வரவுள்ளன. அவை, குளிரூட்டப்பட்ட வசதி, பாதுகாப்பான படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அடே நண்பா.. உன்னை வெல்வேன்! ஒரு அவார்டுக்காக மோடியை பகைத்த ட்ரம்ப்! - நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல்!