1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Assam election machine confusionas

வாக்காளர்கள் 90 பேர்.. வாக்குப்பதிவில் 171 வாக்குகள்! – அசாமில் குளறுபடி!

National
அசாமில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தொகுதி வேட்பாளர்கலை விட வாக்குகள் அதிகம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாமில் மூன்று கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசாமில் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த கோட்லிர் எல்.பி பள்ளி வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் மொத்தம் 90 வாக்காளர்களே உள்ள நிலையில் வாக்கு எந்திரத்தில் மொத்தமாக 171 வாக்குகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹாஃப்லாங் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் கண்டுபிடிப்பு