ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

அயோத்தி ராமர் கோவிலுக்கு குவிந்த நன்கொடை இத்தனை கோடியா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தற்போது ராமர் கோயில் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன முதல் கட்டமாக இந்த கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் பணி நடைபெற்று வருகிறது 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை 3000 கோடி ரூபாய் ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் இருந்து இந்த நிதி வசூல் ஆகி வருவதாகவும் இதற்காக பூமி ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திரா என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த அறக்கட்டளையில் தற்போது ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ராஜஸ்தானிலிருந்து மிக அதிகமாக 557 கோடி ரூபாய் இந்த அறக்கட்டளைக்காக நிதி வந்துள்ளது தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு ரூபாய் 85 கோடி நிதி குறித்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வங்கிகளில் செலுத்தப்பட்ட சுமார் 80,000 காசோலைகள் இன்னும் அறக்கட்டளையின் கடை சேரவில்லை என்ற தகவல் வந்துள்ளது இந்த பணம் சேர்ந்தால் இன்னும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது