1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. elon musk says robos will increase in future

அடுத்த 10 வருசத்தில் 100 கோடி ரோபோக்கள் வந்துரும்!.. எலன் மஸ்க் கணிப்பு!...

elon musk
தற்போதெல்லாம் மனித உருவில் ரோபோ என்கிற தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதுவும் ஏ.ஐ மற்றும் ரோபோ இரண்டும் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது.

AI தொடர்பான புகைப்படங்களை வீடியோக்களும் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில AI  வீடியோக்கள் உண்மையான வீடியோக்கள் போலவே இருக்கிறது. ஒருபக்கம் ரோபோக்களின் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க் ‘அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்..  ஒரு ரோபோவின் உழைப்பும் செயல் திறனும் மனிதனிடம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் அதோடு ரோபோக்களை பிற ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொடங்கும் அப்போது அதன் வளர்ச்சி மிகப் பெரிய அளவிலும் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் அதிகரிக்கும் என அவர் கணித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கர்ப்பிணியை கொலை செய்த கள்ளக்காதலன்.. யூடியூப் பார்த்து உடலை துண்டு துண்டாக வெட்டியதாக வாக்குமூலம்..