நிலவில் மோதிய எலான் மாஸ்க் ராக்கெட்: மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதா? அதிர்ச்சி தகவல்..
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பல மாதங்களாக விண்வெளியில் சுற்றித் திரிந்த இந்த 4,000 கிலோ எடையுள்ள ராக்கெட் பாகம், நிலவின் பின்புறத்தில் மோதியதில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், விபத்தின்போது மாபெரும் தூசுப் படலம் கிளம்பியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு பேருந்தின் அளவுக்கு அல்லது ஐந்து மாடி கட்டிடத்திற்கு இணையான எடைகொண்ட இந்த ராக்கெட், மிகக் கடுமையான வேகத்தில் நிலவில் மோதியுள்ளது. மனிதர்கள் வாழத் தகுதியான சூழல் குறித்து நிலவில் தொடர் ஆய்வுகள் நடந்துவரும் வேளையில், இத்தகைய விபரீத நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தால் பூமிக்கு ஏதேனும் நேரடி ஆபத்து ஏற்படுமா என்று உலக மக்கள் அச்சமடைந்த நிலையில், அதனால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், விண்வெளிக் கழிவுகளால் நிலவின் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச அளவில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
Edited by Siva
