தொடர்புடைய செய்திகள்
- தனுஷின் குபேரா டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
- இளையராஜா பயோபிக் கைவிடப்படுகிறதா?... பரபரப்பைக் கிளப்பிய தகவல்!
- வெளிநாட்டுக்கு செல்லும் தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு!
- சமந்தாவுடனான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கிய நாக சைதன்யா!
- ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சன் சுதீந்திரா நடிக்கும் "சீதா பயணம்"!!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. மீண்டும் ஆஜராகவில்லை. மீண்டும் இணைய வாய்ப்பா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இருவரும் மீண்டும் ஆஜராகாததால் இந்த வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் இருவருமே ஆஜராகாததால், அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அன்றும் மீண்டும் இருவரும் ஆஜராகாததால், நவம்பர் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், இன்றும் இருவரும் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே விவாகரத்து வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதால், மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
