தொடர்புடைய செய்திகள்
- கலக்கிய கே.எல்.ராகுல்: நியூசிலாந்த் அணிக்கு மகத்தான இலக்கு!!
- முன்னாள் விக்கெட் கீப்பரை பீல்டிங் கோச் ஆக நியமித்த கேகேஆர்!!
- வேகமாக வந்து தாக்கிய பந்து – கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த சோகம் !
- உலகக்கோப்பை இறுதி ஆட்டம் – வங்கதேசத்துக்கு 179 ரன்கள் இலக்கு !
- பெண் வீராங்கனையின் சவாலை ஏற்று பேட்டிங் செய்த சச்சின் !
மோசமாக விளையாடும் விராட் கோலி: ரசிகர்கள் வேதனை!
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேப்டன் விராட் கோலி மோசமாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான தொடர் போட்டிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நடந்த டி20 போட்டிகளில் இந்தியா வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்தியா தொடரையும் இழந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தவிர அனைவரும் சுமாரான ஆட்டத்தையே கொடுத்திருக்கின்றனர்.
முக்கியமாக கேப்டன் விராட் கோலி இந்த மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தமே 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அவரது கேப்டன்ஷிப் சரியில்லை என்றும் ரசிகர்கள் குறைப்பட்டுக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்