தொடர்புடைய செய்திகள்
- ”தம்பி.. நியூஸிலாந்து கீழ இறங்குப்பா” மீண்டும் முதலிடத்தில் இந்தியா! – ஐசிசி தரவரிசை!
- வரலாறு காணாத வெற்றி… பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஹீரோவான இளம் வீரர்கள்!
- என்ன அடிடா இது.. மிரண்ட ஆஸ்திரேலியா! – வெற்றியை பறித்து சென்ற இந்தியா!
- தல தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! – பரபரப்பான டெஸ்ட் தொடர்!
- ஒவ்வொரு ஓவரின் முதல்பந்தும் நோபால் – நடராஜன் மீது சூதாட்ட புகாரைக் கிளப்பிய முன்னாள் வீரர்!
கப்பு முக்கியம் பிகிலே.. முதன்முறையாக கோப்பையை ஏந்திய நடராஜன்! – வைரலாகும் புகைப்படம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கோப்பையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை கொண்டு தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜன்தான் தொடர்ந்து பேசிபொருளாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை தொடர்ந்து அணியினருடன் முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியபடி நடராஜன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது விடாமுயற்சியையும், திறமையையும் பாராட்டி பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்