வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (08:06 IST)

பும்ராவின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு… பிசிசிஐ எடுத்த முடிவு!

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்ட நிலையில் பும்ரா வகித்து வந்த துணைக் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கு துணைக் கேப்டனாக யாரையுமே பிசிசிஐ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாகப் பங்களித்து வரும் பும்ரா ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவரிடம் இருந்து துணைக் கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.