1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL Final matches place announced

ஐபிஎல் ப்ளே ஆஃப், இறுதி போட்டி எங்கே நடக்கும்? – சவுரவ் கங்குலி அறிவிப்பு!

IPL 2022
நடப்பு ஆண்டு ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் மற்றும் இறுதி சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல்லின் ஜாம்பவான் அணிகள் தரவரிசையில் பின் தங்கியுள்ள நிலையில் புதிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியை எங்கே நடத்துவது என்பது குறித்து நேற்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் அதுகுறித்து அறிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முதலாவது தகுதி சுற்று மே 24ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று மே 26ம் தேதியும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் என்றும், இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று மே 27ம் தேதியும், இறுதி போட்டி மே 29ம் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தொடர்ந்து 3 தங்கம் வென்று இந்திய வீரர் சாதனை