1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022 Rajasthan Royals team wins super

ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூப்பர் வெற்றி

IPL 2022
ஐபிஎல்  15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்றைய   35 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரஞ்ச்சௌ சாம்சன் பந்து  வீச்சு தேர்வு செய்தார். எனவே ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யதது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளயாடி 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 116 ரன்கள் சேர்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஒரே சீசனில் விராட் கோலி 4 சதங்கள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து விளையாடிய டெல்லி அணியில் ரிஷப் பண்ட் 44 ரன்களும், யாதவ் 37 ரன்களும், பிருத்வி ஷா 37 ரன்களும் எடுத்தனர்.   இமாலய இலக்கை விரட்டி டெல்லி அதிரடியாக ரன்கள் குவித்த போதும் விக்கெட்டுகல் சரிந்ததால் கடை நேரத்தில் திணறியது. எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

எனவே, ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய பவல்!