1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India-England match in Chennai BCCI announcement

சென்னையில் இந்தியா- இங்கிலாந்து போட்டிகள்...பிசிசிஐ அறிவிப்பு

India-England match
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரில் நடராஜன் பந்துவீச்சில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்  முதல் ஆட்டம் வரும் பிப்ரவரி மாதம்-5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

முதலிரண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் சென்னை வாசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி: சென்னையில் முதல் டெஸ்ட்!