தொடர்புடைய செய்திகள்
- ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படவில்லை… அகார்கர் விளக்கம்!
- கோலி, ரோஹித் ஷர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?... கம்பீர் அளித்த பதில்!
- அணி நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு… சிஎஸ்கே அணிக்குத் தாவுகிறாரா ரிஷப் பண்ட்?
- முடிவுக்கு வருகிறதா ஜடேஜாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வாழ்க்கை?
- இலங்கை செல்லும் இந்திய அணி.. கிண்டல் செய்து வாழ்த்து கூறிய சசிதரூர் எம்பி..!
கோலிக்கும் எனக்கும் இடையிலான உறவு பற்றி பொதுவெளியில் பேச முடியாது- கம்பீர்
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து இன்று காலை அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அணி குறித்து பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது அவருக்கும் அணி மூத்த வீரரான கோலிக்கும் இடையிலான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் “இது டி ஆர் பிக்கான நல்ல கேள்வி. ஆனால் எங்கள் இருவருக்குமிடையிலான உறவு குறித்து வெளிப்படையாக என்னால் பேச முடியாது. இருவரும் முதிர்ச்சியடைந்த மனிதர்கள். இப்போது நாங்கள் 140 கோடி இந்தியர்களுக்காக ஒரே அணியில் ஆட இருக்கிறோம். இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம். நான் விராட்டுடன் களத்துக்கு வெளியே எப்போதும் நல்ல உறவையே பேணி வருகிறேன். அது தொடரும் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்