தொடர்புடைய செய்திகள்
- கோலி, ரோஹித் ஷர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?... கம்பீர் அளித்த பதில்!
- அணி நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு… சிஎஸ்கே அணிக்குத் தாவுகிறாரா ரிஷப் பண்ட்?
- முடிவுக்கு வருகிறதா ஜடேஜாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வாழ்க்கை?
- இலங்கை செல்லும் இந்திய அணி.. கிண்டல் செய்து வாழ்த்து கூறிய சசிதரூர் எம்பி..!
- கம்பீருக்காக இறங்கி வந்த ரோஹித் & கோலி… இலங்கை தொடருக்குள் வந்ததன் பின்னணி!
ஜடேஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்படவில்லை… அகார்கர் விளக்கம்!
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அவர் டி 20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால் அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்போது ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் “ஜடேஜா முக்கியமான வீரர். அவரை நாங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக நீக்கிவிடவில்லை. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரவுள்ளது. அதன் பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் பரிசீலிக்கப்படுவார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்