1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jadeja not considered in white ball cricket

முடிவுக்கு வருகிறதா ஜடேஜாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வாழ்க்கை?

கம்பீர்
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான பும்ரா, ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. கம்பீரின் முதல் தொடர் என்பதால் அதில் அனைத்து வீரர்களும் இருக்கவேண்டும் என அவர் விரும்பியதால் இந்த தொடரில் அவர்கள் விளையாட சம்மதித்துள்ளனர்.

இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே அவர் டி 20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால் அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கோலிதான் பெஸ்ட் ப்ரண்ட்… காயத்தில் இருக்கும் போது அவர் வெளிப்படுத்திய அன்பு – ஷமி பகிர்ந்த தகவல்!