வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (16:16 IST)

விக்கெட் இழக்காமல் வெளுத்தெடுக்கும் பேட்ஸ்மேன்கள்… வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

அதன் பின்னர் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டே இழக்காமல் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 37 பந்துகளில் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 38 ரன்களோடு விளையாடி வருகிறார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.