1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni talked about his future in cricket

இன்னும் சில ஆண்டுகள்.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம்திறந்த தோனி!

தோனி
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம்  தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன். அதை என்னால் செய்ய முடியும் என ரசிகர்கள் அறிவார்கள். நாட்டுக்காகக் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதனால் கிரிக்கெட்டுக்குதான் என் முன்னுரிமை.” எனக் கூறியுள்ளார். இதனால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கொல்கத்தாவில் கங்குலி சென்ற கார் விபத்து..!