தொடர்புடைய செய்திகள்
- யுக்ரேன் மீதான ரஷ்யா போர் - இது வரை நடந்தது என்ன?
- யுக்ரேன் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை செலுத்திய ரஷ்யா: உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?
- ரஷ்யா - யுக்ரேன் போர்: இந்த தலைமுறையின் மிக தீவிரமான பாதுகாப்பு நெருக்கடி – நேட்டோ
- சுற்றிவளைத்த ரஷ்யப் படை, பணிய மறுக்கும் யுக்ரேன் படை
- யுக்ரேன் நெருக்கடி: அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பிறகு சீனாவின் எதிர்வினை
ரஷ்யப்படைகளால் எங்கும் முன்னேற முடியவில்லை - யுக்ரேன்
ரஷ்யப்படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், யுக்ரேனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், யுக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யப்படைகள் தாங்கள் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், கீயவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், ஆனால், "தலைநகரை கைப்பற்றுவதில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
"எதிரிப்படைகள் (ரஷ்யப்படைகள்) மீண்டும் ஒருங்கிணைந்துள்ளன, ஆனால், அவர்களால் யுக்ரேனில் எங்கும் முன்னேற முடியவில்லை," என, அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் இழப்புகளுக்கு மத்தியில், செர்னோபில் வாயிலாக ரஷ்ய ராணுவக் குழுக்கள் பெலாரூஸில் ஒன்றிணைந்துள்ளதாக, யுக்ரேன் ஆயுதப்படை தளபதி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கீயவை சுற்றி வளைக்கும் முயற்சிகளை வலுப்படுத்த ரஷ்யப்படைகள் திரும்பலாம் எனவும், அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்