1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Cheteshwar Pujara, 'The New Wall' of Indian Cricket, Announces Retirement

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

Cheteshwar Pujara
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் 'புதிய சுவர்' எனப் போற்றப்பட்ட முன்னணி வீரர் சேதேஷ்வர் புஜாரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
 
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இருந்து வந்த புஜாரா, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக அவர் 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவருக்குப் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தான் அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்.
 
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், 103 போட்டிகளில் 19 சதங்கள், 35 அரைசதங்கள் மற்றும் 3 இரட்டை சதங்கள் உட்பட மொத்தம் 7,195 ரன்களை புஜாரா குவித்துள்ளார். இந்திய அணி பலமுறை கடினமான சூழ்நிலைகளில் சிக்கியபோது, தனது பொறுமையான மற்றும் நீண்ட இன்னிங்ஸ் மூலம் அணியைச் சரிவில் இருந்து காப்பாற்றியுள்ளார். அதனால்தான், அவருக்கு ராகுல் டிராவிட்டுக்குப்பிறகு 'புதிய சுவர்' என்ற பட்டம் கிடைத்தது. 
 
சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத நிலையில், அவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பும், சாதனைகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?