1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Airtel Network Down Again in Major Indian Cities

முக்கிய நகரங்களில் மீண்டும் ஏர்டெல் சேவை முடக்கம்; வாடிக்கையாளர்கள் அவதி

Airtel
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், சமீப நாட்களாக அடிக்கடி சேவை முடக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பெரிய அளவிலான பாதிப்பிற்கு பிறகு, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் ஏர்டெல் பயனர்கள் இன்று மீண்டும் சேவை குறைபாடுகளை எதிர்கொண்டனர்.
 
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பிற பெருநகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் இணையம் மற்றும் மொபைல் அழைப்புகள் உட்பட பல சேவைகளில் இடையூறுகளை புகாரளித்துள்ளனர்.
 
ஏர்டெல் நிறுவனம், இந்த சேவை முடக்கம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளது. இது ஒரு தற்காலிக இணைப்புத் துண்டிப்பு காரணமாக ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்குள் இது சரிசெய்யப்படும் என்றும் நிறுவனம் கூறியது. "ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்தப் பிரச்சினை ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, உங்கள் மொபைல் போனை மறுதொடக்கம் செய்தால் சேவைகள் மீண்டும் கிடைக்கும்" என்று ஏர்டெல் கேர்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டுள்ளது.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அடுத்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் விடுமுறையா? இதோ முழு விவரங்கள்..!