தொடர்புடைய செய்திகள்
- மெட்ரோ ரயில் பணி: கோடம்பாக்கத்தில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்
- தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
- மதுரை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்குவது எப்போது? திட்ட இயக்குநர் அர்ஜுனன் தகவல்!
- காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தைப்பூச திருநாளை முன்னிட்டு அரக்கோணம் முதல் திருத்தணி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாட இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் ஏராளமாக குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரக்கோணம் வரும் பக்தர்கள் அரக்கோணத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் மூலம் திருத்தணிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை தைப்பூச திருவிழாவுக்கு திருத்தணி வரும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
