1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:47 IST)

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயலால் 373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் என்ற சுமார் 120 மைல்/மணி வேகத்தில் வீசி பல சேதங்களை விளைவித்துள்ளது. இந்த கடும்புயல் காரணமாக, குறைண்டஹ்து 375 பேர் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 500 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் 56 பேரைக் காணவில்லை எனவும் சொல்லப்படுகிறது.  பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்தித்த இழப்புகள் இப்போது வரை முழுமையாக கணக்கெடுக்க முடியவில்லை.. உயிரிழப்புகளையும் கணக்கெடுக்க முடியவில்லை..தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.