1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (11:05 IST)

டிரம்புக்கு ஆப்பு வைப்பார்களா அமெரிக்கர்கள்..?? கருத்துக்கணிப்பில் துயர முடிவு

அதிபர் தேர்தலில் அதிகமானவர்கள் டிரம்பிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், மீண்டும் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ வால்ஷ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது என அமெரிக்கர்களிடம் ராஸ்மூசன் என்ற நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 52 சதவீதம் பேர் டிரம்பிற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக கருத்து கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் பட்சத்தில்  இந்த சதவீதம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.