1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iron asking to quit america and isrel

கச்சா எண்ணெய் வேணுமா?!. இதை செய்யுங்க!.. அரபு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை..

oil
ஈரான் நாடு அணு ஆயுதத்தை வைத்துக்கொள்ளக்கூடாது என சொல்லி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் நாட்டின் மீது கடந்த 10 நாட்களுக்கும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபக்கம், அமெரிக்காவின் ராணவு படைகளுக்கு இடம் கொடுத்துள்ள வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் எனதெரியவில்லை. ஒருபக்கம், வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு சொந்தமான கடல் பகுதியில் உள்ள ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகவே கச்சா எண்ணெயை கப்பல்களை  இயக்கி வருகின்றனர். போர் காரணமாக அந்த பாதையை ஈரான் மூடிவிட்டது.

இதன் காரனமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது. எனவே, இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வணிக சிலிண்டரை பயன்படுத்தும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரில் இன்று ஹோட்டல்கள் மூடப்பட்டது. அதேபோல், சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரியில் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதர்களை வெளியேற்றும் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் ஹோர்மூஸ் வழியாக செல்லலாம் என ஈரான் நிபந்தனை விதித்திருக்கிறது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
டீயும் காபியும் கலந்த மாதிரி இருக்கும்!.. விஜயுடன் கூட்டணி பற்றி அண்ணாமலை நக்கல்!..