1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Iran Rejects US Peace Proposal and Issues Five Bold Conditions

அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க முடியாது: போர் தொடரும்.. ஈரான் அறிவிப்பால் மீண்டும் பதட்டம்..!

america
அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தங்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், போர் நிறுத்தத்திற்கு ஐந்து அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. 
 
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
 
பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்துவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உயர்ந்துள்ளது. 
 
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்கும் வரை தாக்குதல்கள் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த மோதலால் இதுவரை ஈரானில் 1,500 பேரும், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தரப்பில் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தானை போல இந்தியா ஒரு இடைத்தரகராக செயல்படாது: ஜெய்சங்கர் உறுதி