தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பை கனவு அணியில் இடம்பெற்ற 6 இந்திய வீரர்கள்!
- உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 6 இந்திய வீரர்கள்: ஐசிசி அறிவிப்பு..!
- ஒரே அணியில் 500 ரன்களுக்கும் மேல் 3 வீரர்கள்.. உலகக்கோப்பையில் இதுதான் முதல்முறை..!
- காரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து.. கார் ஓட்டுனர் படுகாயம்..!
- இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்..!
கடலில் பாய்ந்தது இராணுவ விமானம்.. நீந்தி கரை சேர்ந்த 9 வீரர்கள்..!
ஹவாய் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடலில் விழுந்ததை அடுத்து அதிலிருந்து ஒன்பது ராணுவ வீரர்கள் நீந்தி கரை சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
ஹவாய் கப்பல் படை சமீபத்தில் விமான பயிற்சியில் ஈடுபடும் போது திடீரென விமானம் தரையிறங்கிய போது பாதை மாறி கடலில் விழுந்தது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்கள் அதிர்ஷ்டவசமாக கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் திடீரென பாதை மாறி கடலில் விழுந்தது ஏன் என்பது குறித்து ஹவாய் ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
