தொடர்புடைய செய்திகள்
- தடுப்பூசி போட்ட டாக்டருக்கு கொரோனா…ஜெர்மன் பிரதமருக்கு பரிசோதனை
- எல்ஐசி பங்குகள் விற்கபடுவது ஏன்? நிர்மலா சீதாராமனின் அடடே விளக்கம்!!
- வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை - ராகுல் காந்தி விமர்சனம் !
- பெண் கல்வி குறித்து பேசிய நிதியமைச்சர்: நிர்பயா என கத்திய எதிர்கட்சிகள்!
- மோடி ஸ்டைலில் ஆத்திசூடி சொன்ன நிதியமைச்சர்! – பட்ஜெட் 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம்… தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர் !
கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜெர்மன் நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையான பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான ஒரு நாடாக ஜெர்மனியும் இருக்கிறது. அந்நாட்டின் நிதியமைச்சரான தாமஸ் ஸ்கேஃபர் இதனால் தற்கொலை செய்துகொண்ட செய்தி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது சடலம் ப்ராங்பட் நகரின் ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப் படுத்தியுள்ளது. தாமஸ் பொருளாதார சீரழிவை சரிசெய்ய பலவிதங்களில் முயன்றதாகவும், இது சம்மந்தமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் அவரது முடிவு நம்ப முடியாததாக இருப்பதாகவும் சக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
