வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (18:45 IST)

பாகிஸ்தானில் அதிர்ந்தது பூமி.. பொதுமக்கள் பீதி

பாகிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் இந்துகுஷ் பகுதியை மையாகக்கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர், மர்டன், மலகண்ட் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்பட்டது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் பயங்கரமாத குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதங்கள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.