40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..
உலகில் அமெரிக்கா பணக்கார நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல், அதிக வலிமை கொண்ட வல்லரசு நாடாக அமெரிக்கா இருக்கிறது. எந்த இரு நாடுகள் போரில் ஈடுபட்டாலும் அமெரிக்கா அதில் மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரும். அதேபோல், பொருளாதார நெருக்கடிகளை சில நாடுகள் சந்திக்கும்போது அந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவியும் செய்யும்.
அதேநேரம், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றவுடன் அமெரிக்காவின் கடன் அதிகரிக்க துவங்கியது. அமெரிக்காவின் கடன் வரலாறு காணாத வகையில் 40 ட்ரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.3828 லட்சம் கோடி) டாலரை தாண்டிவிட்டது. கடந்த 2017ம் வருடம் டிரம்ப் முதல் முறையாக அதிபராக பதவியேற்றபோது 20 ட்ரில்லியன் டாலராக இருந்த கடன் இரு மடங்காக அதிகரித்துவிட்டது.
ராணுவ செலவுகள், முதியோர் நலத்திட்டங்கள், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் உள்ளிட்டவை கடன் உயர முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
ராணுவ செலவுகள், முதியோர் நலத்திட்டங்கள், அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் உள்ளிட்டவை கடன் உயர முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
