வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

அற்புத சுவையில் தட்டை செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 2 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 2 பற்கள்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை
 
புழுங்கல் அரிசியை ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போதே அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தெடுக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். 
 
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாக தட்டவும்.
 
எண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாக போட்டு வேகவைக்கவும். ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆறவிடவும். சுவையான, மொறுமொறுப்பான தட்டை தயார்.