1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
  4. nanjil vijayan insta story goes viral

திருநங்கை சாபம் பழிச்சிடுச்சி!. நடிகர் நாஞ்சில் விஜயன் பதிவிட்டாரா?!.. பரபரப்பு!...

nanjil vijayan
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் திருநங்கை வைஷ்ணவி ‘நாஞ்சில் விஜயன் என்னுடன் நெருங்கி ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார்’ என சில மாதங்களுக்கு முன்பு புகார் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்..

ஆனால் நாஞ்சில் விஜயன் அவரின் புகாரை மறுத்தார்.. எனக்கும் அவருக்கும் தொடர்பில்லை என தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில்தான் திருநங்கையின் சாபம் பழித்துவிட்டது.. நான் மனைவியை புரிந்து விட்டேன் என நாஞ்சில் விஜயன் வெளியிட்டதாக பதிவு தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது..

சமூகத்தில் விமர்சனங்களை எதிர்கொண்ட போதும் குடும்பம் எனக்கு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆனால் அந்த நம்பிக்கை வீணாகிவிட்டது.. வீட்டில் ஏற்பட்ட ஒரு சண்டையில் ‘நீ ஒரு திருநங்கை ஏமாற்றிவிட்டுதானே என் பெண்ணை திருமணம் செய்தாய்’ என்று என் மாமியார் கேட்டு விட்டார். தற்பொழுது என் மனைவியை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறேன்..

nanjil vijayan

அந்த திருநங்கை சகோதரி என் மீது புகார் கூறிய போது திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாது என்று சிலர் கமெண்ட் செய்தார்கள். தற்போது அந்த சாபம் பழித்துவிட்டது.. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்.. நான் தோற்றுவிட்டேன்’  என்று நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பதிவு தற்போது நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இல்லை.. அதேநேரம் ‘புரிந்து கொள்ள வில்லை என்றாலும் பரவாயில்லை.. எதையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்’ என தற்போது அவர் பதிவிட்டிருக்கிறார்.. உண்மையிலேயே நாஞ்சில் விஜயன்தான் இப்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டாரா? உண்மையிலேயே அவர் மனைவியை பிரிந்துவிட்டாரா? இல்லை இது வதந்தியா என்பது விரைவில் தெரிந்து விடும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே ஒரு நொடியில் எல்லாம் போய்விடும்!.. நிவேதே பெத்துராஜ் ஃபீலிங்!...