1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  4. Public refuse to vote

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை - தேர்தல் புறக்கணிப்பு!

TN Assembly Election 2021
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர். இதில் சிலர் வாக்களிப்பதை புறக்கணித்துள்ளனர். 
 
அரக்கோணம் அடுத்த சித்தாம் பாடி - அம்பேத்கர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி, கருப்பு கொடியுடன் தேர்தலைப் புறக்கணித்த மக்கள். 
 
சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்த கோடங்கிபட்டி கிராம மக்கள். 
அடுத்த கட்டுரையில்
ரசிகரின் நலனுக்காக செல்போனை பிடிங்கினார் நடிகர் அஜித்!