வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 மே 2021 (17:00 IST)

சி எஸ் கே அணி நிர்வாகத்தில் மூவருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மிக மோசமாக உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் பயோ பபுளில் வீரர்களை வைத்து நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள இருந்த நிலையில் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இன்றைய போட்டி மே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது மற்றொரு அதிர்ச்சி செய்தியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, மற்றும் அணிப்பேருந்தின் ஓட்டுனர் உதவியாளர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது.