1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:39 IST)

கெய்லுக்கு வித்தியாசமாக வீசிய ரியான் பராக்… எச்சரித்த நடுவர்!

நேற்றைய போட்டியில் ரியான் பராக்கின் பந்துவீச்சு வித்தியாசமாக இருக்கவே அவரை நடுவர் எச்சரித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் பராக் 10 ஆவது ஓவர் வீசும்போது ராகுலுக்கு சாதாரணமாகவும், கெய்லுக்கு தோலுக்கு மேல் கையை சுற்றாமல் இடுப்பளவுக்கே கையை சுற்றி வீசினர். இதனால் கெய்ல் குழம்பி போனார். இதையடுத்து பராக்கை நடுவர் எச்சரித்த பின் சாதாரணமாக வீசினார். ஆனால் அதே ஓவரில் கெய்ல் அவ்ட் ஆகி வெளியேறினார்.