1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Next two matches important to RCB

அடுத்து வரும் இரு போட்டிகளும் பெங்களூரு அணிக்கு முக்கியமானது… ஏன் தெரியுமா?

ஆர்சிபி
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் இப்போது ப்ளே ஆஃப் செல்லும் அணிகள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

வழக்கமாக சொதப்பலாக விளையாடும் பெங்களூர் அணி இந்த முறை சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளை அந்த அணி ஏனோ தானோவென்று விளையாட முடியாது.

ஏனென்றால் அந்த இரு போட்டிகளையும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சன் ரைசர்ஸ் ஜதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளோடு மோத உள்ள கடைசி இரண்டு போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை ஆகும். 
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
இதனால்தான் நான் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றவில்லை… வாசிம் அக்ரம் கருத்து!