1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. MS Dhoni says he will continue In IPL

என்னுடைய கடைசி ஆட்டம் அங்கேதான் நடக்கும்! – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!

Crciket
ஐபிஎல் தொடரில் இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற உள்ளதாக பேசப்பட்ட நிலையில் இதுகுறித்து தோனி சூசகமாக பதில் சொல்லியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.தோனி இந்திய அணி போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில் தற்போது ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசன்தான் தோனி விளையாடும் கடைசி சீசன் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சூசகமாக பதில் சொல்லியுள்ள தோனி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும் என கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் நடப்பதால் தான் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்பதை தோனி சூசகமாக சொல்லியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை எட்டி உதைத்த வீரர் கைது!