தொடர்புடைய செய்திகள்
- வீடு வாங்க ஆலோசனை கேட்ட ரிஷப் பண்ட்… கலாய்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
- இந்திய வீரர்கள் இன ரீதியான தாக்குதலுக்கு ஆளானது உண்மைதான்! ஆஸி கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்!
- இந்திய அணி வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சோதனை !
- சாதிய இழிவுவார்த்தையை பேசினாரா அஸ்வின் – வெடித்தது அடுத்த சர்ச்சை!
- என்னால் ரன்கள் சேர்க்க முடியாததால் பண்ட்டுக்கு இடம் கிடைத்தது – சஹா பெருந்தன்மை!
ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் கருத்து வேறுபாடா?
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் அந்த அணியின் முன்னணி வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை சிறப்பாக வென்று வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியில் பல சலசலப்புகள் எழுந்துள்ளன. அதில் முக்கியமாக ஆஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கும் அணியின் மூத்த வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாங்கர் அடிக்கடி ஆட்ட யுத்திகளை மாற்றுவதாகவும், அதனால் வீரர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
