1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Natarajan hoing temple as a devotee

சோதனைகளை கடந்த சாதனை! – பழனியில் நேர்த்தி கடன் செய்த நடராஜன்!

Tamilnadu
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜன் பழநி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செய்தார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் மூலமாக தனது திறமையை நிரூபித்து ஐபிஎல்லில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம்பெற்று சாதனை படைத்தவர் நடராஜன். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது தனது மனைவிக்கு குழந்தை பிறந்தபோது நாட்டிற்காக விளையாடுவதை முக்கியமாக கருதி வெற்றியை ஈட்ட உதவிய நடராஜனுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பழநி முருகன் கோவில் சென்ற நடராஜன் அங்கு மொட்டையடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் கருத்து வேறுபாடா?