1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India vs county match drawn

கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டம் டிரா!

இந்தியா
இந்திய அணிக்கும் கவுண்ட்டி அணிக்கும் இடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட்4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்காக இந்திய அணி கவுண்ட்டி அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது. இந்த போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 311, கவுண்டி அணி 220 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான நேற்று இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் பேட் செய்த கவுண்ட்டி அணி 31 ரன்கள் சேர்த்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
அடுத்த கட்டுரையில்
இந்தியா - இலங்கை 3வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஓவர்கள் குறைப்பு