தொடர்புடைய செய்திகள்
- தொழிலாளிகளின் உற்ற நண்பன் திமுக..! – மு.க.ஸ்டாலின் தொழிலாளர் தின வாழ்த்து!
- உரிமைகளை போராட்டத்தால் வென்றெடுத்த நாள்! – ஓபிஎஸ் தொழிலாளர் தின வாழ்த்து!
- 18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!
- பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நன்மைகள்...?
- வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்களும் பயன்களும்
2 நாளைக்கு சரக்கு கிடைக்காது.. நேற்றே குவிந்த மதுப்பிரியர்கள்! – டாஸ்மாக் வசூல்!
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் விடுமுறை என்பதால் நேற்றே மதுபானங்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.
இன்று தொழிலாளர் தினம் என்பதாலும், நாளை முழு ஊரடங்கு என்பதாலும் இரண்டு நாட்களும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு தேவையான மதுவை வாங்க மதுப்பிரியர்கள் நேற்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இதனால் நேற்று ஒரு நாளில் தமிழகம் முழுவதும் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதுதவிர திருச்சி - 56.72 கோடி சேலம் - 55.93 கோடி மதுரை - 59.63 கோடி கோவை - 56.37 கோடி என மதுவகைகள் விற்பனையாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
