தொடர்புடைய செய்திகள்
- 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்
- குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்? அன்பில் மகேஷ் தகவல்
- 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் தொடங்கும்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!
- தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு
மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கா? இல்லையா?
மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில்.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும்.
இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்த நாட்களே விடுமுறை வழங்கப்படுமென தெரிகிறது. இதனிடையே இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாட திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்.
அடுத்த கட்டுரையில்
