1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 மே 2022 (17:28 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவரை கொலை செய்த பெண்!

murder
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்த பெண் ஒருவரால் திருப்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபால் - சசிகலா என்ற தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சுசிலாவுக்கு ஒரு கள்ள காதலன் ஒருவர் இருந்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் கோபால் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது சுசிலாவுக்கு மாரிஸ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்வதற்கு கோபால் தடையாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும் தெரியவந்தது
 
இதனை அடுத்து மாரிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்