1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 12th std public exam fear student suicide

தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலை: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

Fire
தேர்வு பயம் காரணமாக மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்று தேர்வு எழுதினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசி வழங்கினர்.
 
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வு பயம் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச முடிவு!